tamilnadu

img

ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீரர்கள் காயம்

ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ராணுவத்தின் 44 ராஷ்டிரீய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் புல்வாமா மாவட்டத்தின் அரிஹால் என்ற கிராமத்தில் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்த னர். அப்போது தீவிரவாதிகள் அந்த வாகனத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். மேலும் ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிகளாலும் சுட்டனர். இதில் வாகனம்  சேதம் அடைந்தது. எனினும் அதில் இருந்த வீரர்கள்  சிறு காயங்களுடன் தப்பினர். இது தொடர்பான ராணுவத்தின் அறிக்கையில் தீவிரவாதிகளின் தாக்குதல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுவட்டாரங்களில் ராணுவத்தினர் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே உளவுத்துறை தவகல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது.
 

;